மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

திருக்கோவிலூரில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :2 மே 2013, 12:19 pm IST

திருக்கோவிலூரில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 திருக்கோவிலூர் பேரூராட்சி 5-வது வார்டில், வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன.  கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை என்பதும் இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.

 இந்நிலையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்திட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் 5-வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் வந்து மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.   அப்போது முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி உறுப்பினர் எல்.தங்கராஜ் உத்தரவாதம் அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு மக்கள் கலைந்தனர்.  இந்த மறியலால் ஆஸ்பிட்டல் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.