திருக்கோவிலூரில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் பேரூராட்சி 5-வது வார்டில், வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை என்பதும் இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.
இந்நிலையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்திட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் 5-வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் வந்து மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி உறுப்பினர் எல்.தங்கராஜ் உத்தரவாதம் அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு மக்கள் கலைந்தனர். இந்த மறியலால் ஆஸ்பிட்டல் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

