விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஒரு வாரத்துக்குள் புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பில் 32,785 மாணவர்களும், ஏழாம் வகுப்பில் 33,060 மாணவர்களும், 8-ம் வகுப்பில் 36,215 மாணவர்களும், 9-ம் வகுப்பில் 48970 மாணவர்களும், 10-ம் வகுப்பில் 45,400 மாணவர்களும், பிளஸ் 1-ல் 34,400 மாணவர்களும், பிளஸ் 2 வில் 28,950 மாணவர்களும் உள்ளனர்.
அரசு சார்பில் இவர்களுக்கு வழங்குவதற்காக விஜயவாடா, ஹைதராபாத், மதுரை, சிவகாசி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் விழுப்புரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கிருந்து ஒரு வாரத்துக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். பள்ளி திறந்தவுடன் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








