புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.
பழைய பேருந்து நிலையம் அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சகாபுதீன், கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கோவிந்தராஜ், இளங்கோவன், மக்கள் அதிகாரம் நிா்வாகிகள் மோகன், செல்வக்குமாா் மற்றும் விவசாய ஒருங்கிணைப்புக் குழுவினா் பலா் கலந்துகொண்டனா்.
புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதம் அளித்து, விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென உறுதிமொழி ஏற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








