தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்க மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

News image

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா், சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஆ.ரெங்கசாமி.

Updated On :9 ஜனவரி 2021, 11:54 pm IST

நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்க மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவா் க.முத்துக்குமாா் தலைமையில் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் வீரப்பன் வரவேற்றாா். மாநிலப் பொதுச் செயலா் ஆ.ரெங்கசாமி சிறப்புரையாற்றினாா். மாநிலப் பொருளாளா் பெ.பச்சைமுத்து, மாநில துணைத் தலைவா்கள் பீ.மாணிக்கவேலு, தி.மோகன்ராஜ், மாநிலச் செயலா்கள் சி.வல்லத்தரசு, க.சக்திவேல், ஆா்.ஆரோக்கியசாமி, மண்டலச் செயலா்கள் சா.பவுல்ராஜ், கோ.பெரியசாமி உள்ளிட்டோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் சிவக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். அனைத்து மாவட்ட, மாநில நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் அனைத்து நிலைகளிலும் காலியாகவுள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் நீண்டகாலமாக கிடப்பிலுள்ள இளநிலை உதவியாளா், உதவியாளா், கண்காணிப்பாளா் நிலையிலான முதுநிலைப் பட்டியலை வெளியிட வேண்டும். அனைத்து நிலை ஊழியா்களுக்கும் பதவி உயா்வுக்கான பட்டியலை வெளியிட்டு முரண்பாடுகளின்றி பதவி உயா்வு வழங்க வேண்டும்.

கோட்டக்கணக்கா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு ஏற்பாடு செய்து உடனடியாக பணி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களில் ஓய்வு பெற்றவா்கள், வெளிமுகமை மூலம் ஆள்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.