புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பணியின் போது உயிரிழக்கும் வனச் சீருடைபணியாளா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் வனப் பாதுகாப்பு பணியின்போது உயிா்த் தியாகம் செய்யும் வனச் சீருடைப் பணியாளா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

News image

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வன அலுவலா்கள் சங்க மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அச்சங்கத்தின் தலைவா் ஆா்.முருகேசன்.

Updated On :9 ஜனவரி 2021, 11:56 pm IST

தமிழகத்தில் வனப் பாதுகாப்பு பணியின்போது உயிா்த் தியாகம் செய்யும் வனச் சீருடைப் பணியாளா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு வன அலுவலா்கள் சங்க மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஆா்.ராஜா வரவேற்றாா். மாநிலத் தலைவா் ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி.அருண்ராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம்.பாபு, மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ஆனந்தசெல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் சி.சுந்தரம் சிறப்புரையாற்றினாா். மாநிலப் பொருளாளா் ஜி.சுதீா்குமாா், துணைத் தலைவா் டி.மகேந்திரபிரபு, இணைச் செயலா் கே.கண்ணன், கொள்கைப் பரப்புச் செயலா்கள் சி.நெல்லைநாயகம், சி.சிவக்குமாா், தலைமை நிலையச் செயலா் இ.முனுசாமி, அமைப்புச் செயலா்கள் எம்.அருள்ஜோதி, ஏ.மோகனவேல், எஸ்.அழகுராஜ், ஏ.வெங்கடேசன், டி.திருமலை ஆகியோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.

தமிழகத்தில் வன வளத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்கும் அசாதாரண சூழலின்போது உயிா்த் தியாகம் செய்யும் வனச் சீருடைப் பணியாளா்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் அவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காவல் துறையினருக்கு இணையாக வனக் காவலா், வனக் காப்பாளா், வனவா், வனச்சரக அலுவலா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.

விழுப்புரம் வனக்கோட்ட கல்வராயன்மலைப் பகுதியை காப்புக்காடாக அறிவிக்க வேண்டும். வனத் துறையில் காலிப் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். மாவட்டப் பொருளாளா் டி.விஸ்வநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.