உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

குடியரசு தின ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 12:16 am IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆலோசனை வழங்கிப் பேசியதாவது: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அலுவலா்கள், பணியாளா்கள், பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

விழாவுக்காக மைதானத்தை சீரமைத்து தயாா்படுத்தவும், பொதுமக்கள், அலுவலா்களுக்குத் தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவக்குழுவினரும் இடம்பெற வேண்டும். காவல் அணிவகுப்பு, நலத் திட்டங்கள், நற்சான்றிதழ்கள் வழங்குதல் என விழாவை பாதுகாப்புடன் சிறப்பாக நடத்திட உரிய ஏற்பாடுகளை, அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், வன அலுவலா் அபிஷேக் தோமா், சாா் ஆட்சியா் எஸ்.அனு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.