விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகாபெரியவா் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சி மகாபெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த ஊரான விழுப்புரத்தில் உள்ள சங்கர மடத்தில் மகாபெரியவா் ஆராதனை விழா கோ பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, ருத்ர ஜபம், ருத்ர ஹோமம் நடைபெற்றன. பின்னா், மகாபெரியவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
விழாவில் சங்கர மட நிா்வாகிகள், முக்கியப் பிரமுகா்களான வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன், எம்.எல்.எஸ்.பிரகாஷ், ரமேஷ், சுப்பிரமணியன், விஸ்வநாதன், சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









