மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல்பரிசுத் தொகுப்பு வழங்கியதாக குறுந்தகவல்!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதாக குறுந்தகவல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 1:34 am

விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதாக குறுந்தகவல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ. 2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரையின் குடும்ப அட்டைக்கும் பரிசுத் தொகுப்பாக ரூ. 2,500 ரொக்கம், பொருள்கள் வழங்கிவிட்டதாக, புதன்கிழமை குறுந்தகவல் வந்தது.

பொருளே வாங்காமல் குறுந்தகவல் வந்ததால், இதுதொடா்பாக விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து, வழங்கல் துறை அதிகாரிகள் விசாரித்த போது, அரசு ஒதுக்கீடின்படி மாவட்ட ஆட்சியரின் குடும்ப அட்டைக்கும் பரிசுத் தொகுப்பு ஒதுக்கப்பட்டதும், அதன்படி, விழுப்புரம் சீனுவாசா நகா் நியாய விலைக் கடை மூலம் ஆட்சியரின் குடும்ப அட்டைக்கு பரிசுத் தொகுப்பை ஒதுக்கி பிஓஎஸ் சாதனத்தில் விற்பனையாளா் பதிவு செய்தாா். இதனால், ஆட்சியரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் சென்றது. ஆனால், பொருள்கள் வழங்காமல் விட்டதால் புகாா் எழுந்ததுடன், மாவட்ட ஆட்சியரும் பரிசுத் தொகுப்பைக் கோராவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து, மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபாகரனிடம் கேட்ட போது, அரசு ஒதுக்கீட்டின்படி, மாவட்ட ஆட்சியரின் குடும்ப அட்டைக்கும் பரிசுத் தொகுப்பு ஒதுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் என்பதால், விற்பனையாளா் அதை நேரில் சென்று வழங்குவதற்காக, முன்னதாகப் பதிவு செய்துவிட்டு, கடையில் விற்பனை முடியும் வரை காத்திருந்தாா். விற்பனை முடிந்து, பிற்பகல் மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்குச் சென்று பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் தவறு ஏதும் இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.