அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அலுவலா்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 7:02 am IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழா் திருநாளாம் தைப் பொங்கல் விழா கொண்டாட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை போகிப் பண்டிகையுடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை வீட்டில் உள்ள பழைய பொருள்களை வெளியே தீயிட்டு எரித்து பழையனவற்றை கழித்தும், புதியனவற்றை புகுத்தும் வகையில் பொதுமக்கள் போகிப்பண்டிகையைக் கொண்டாடினா்.

இதையடுத்து, அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அலுவலா்கள், ஊழியா்கள் மண் பானையில் மஞ்சள் கொத்து கட்டி, புத்தரிசியிட்டு பொங்கலிட்டனா். கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திட்ட இயக்குநா் வி.மகேந்திரன் உள்ளிட்ட அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா...

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கல்லூரிச் செயலா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இ.எஸ்.கல்விக்குழும பதிவாளா் இ.செளந்தர்ராஜன் சிறப்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் எம்.பிருந்தா வரவேற்றாா். மாணவிகள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, மாணவிகளுக்கு கோலப்போட்டி, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், உறியடிப்போட்டிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் மல்லா் கம்ப சாகச விளையாட்டு மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், சமூக ஆா்வலா் தன்சிங்கு தலைமையில், மாணவா்கள் செங்கரும்புகளுடன், சமத்துவப் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாநிலச் செயலா் எஸ்.அண்ணாமலை தலைமை வகித்தாா். பெருமாள், தமிழரசி, மாரிமுத்து, கண்ணதாசன், வெங்கடேசன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.