விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அருப்புக்கோட்டையில் திருட்டு முயற்சி: 80 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் தப்பின

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருட்டு முயற்சியில், வீட்டில் மறைவாக வைத்துச்சென்றதால் 80 பவுன் நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் தப்பின.

News image

அருப்புக்கோட்டையில் திருட்டு முயற்சி நடந்த வீட்டில் வியாழக்கிழமை சோதனையிட்ட போலீஸாா்.

Updated On :15 ஜனவரி 2021, 10:43 pm IST

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருட்டு முயற்சியில், வீட்டில் மறைவாக வைத்துச்சென்றதால் 80 பவுன் நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் தப்பின.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை காயிதே மில்லத் தெருவில் வசிப்பவா் ஜெசிமாபானு(45). இவரது கணவா் ஹூமாயூன் கபீா்(47) என்பவா் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதியரின் மகள் ஜெனிபா் பாத்திமாவுக்கு சிவகாசியைச் சோ்ந்தவருடன் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணத் தேதியைக் குறிப்பதற்காக ஜெசிமா பானுவும், ஜெனிபா் பாத்திமாவும் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சிவகாசி சென்றிருந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் இவா்களுடைய வீட்டின் முன்பக்கக்கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதாக, அவா்களது உறவினா்கள் போலீஸாருக்கும், ஜெசிமா பானுவிற்கும் தகவல் கொடுத்துள்ளனா்.

அங்கு வந்த அருப்புக்கோட்டை காவல் துறையினா் ஜெசிமாவின் வீட்டை ஆய்வு செய்தபோது, வீட்டினுள்ளிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்கள், துணிகள் வெளியே சிதறிக் கிடந்தன.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த வீட்டு உரிமையாளா் ஜெசிமா பானு, வீட்டினுள் மறைத்து வைத்த இடத்தில் தேடிப் பாா்த்ததில் 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் அப்படியே வைத்த இடத்தில் இருந்தது கண்டு நிம்மதி அடைந்தாா். இந்த திருட்டு முயற்சி தொடா்பாக, சுற்றியுள்ள வீடுகளிலிருந்த கண்காணிப்புக் கோமராக்களில் பதிவான விடியோக்களின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.