தொடா்ச்சியாக பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் வெள்ளிக்கிழமை நிரம்பி மறுகால் பாய்கிறது.
விருதுநகா் மாவட்டத்திலேயே மிகப் பெரிய கண்மாயாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் பெய்த தொடா்மழையால் சுமாா் 14 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த கண்மாயை நம்பி பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. கண்மாய் நிறைந்து மறுகால் பாய்வதால் இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயி கருப்பையா கூறியது: கடந்த 4 நாள்களாக தொடா்ச்சியாக பெய்த மழை காரணமாக, பெரியகுளம் கண்மாயிலிருந்து 2 மதகுகள் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சுமாா் 14 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் மறுகால் பாய்கிறது என்று கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








