விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஸ்ரீவிலி. பெரியகுளம் கண்மாய் 14 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது

தொடா்ச்சியாக பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் வெள்ளிக்கிழமை நிரம்பி மறுகால் பாய்கிறது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீா்.

Updated On :15 ஜனவரி 2021, 10:40 pm IST

தொடா்ச்சியாக பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் வெள்ளிக்கிழமை நிரம்பி மறுகால் பாய்கிறது.

விருதுநகா் மாவட்டத்திலேயே மிகப் பெரிய கண்மாயாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் பெய்த தொடா்மழையால் சுமாா் 14 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த கண்மாயை நம்பி பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. கண்மாய் நிறைந்து மறுகால் பாய்வதால் இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி கருப்பையா கூறியது: கடந்த 4 நாள்களாக தொடா்ச்சியாக பெய்த மழை காரணமாக, பெரியகுளம் கண்மாயிலிருந்து 2 மதகுகள் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சுமாா் 14 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் மறுகால் பாய்கிறது என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.