சிவகாசி: சிவகாசியில் 10 மாதங்களுக்குப் பின்னா் நகராட்சி தினசரி காய்கனி சந்தை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
சிவகாசி நகராட்சி தினசரி காய்கனி சந்தை இங்குள்ள காவல்நிலையச் சாலையில் உள்ளது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த சந்தை மூடப்பட்டது. அதையடுத்து, பெரியகுளம் கண்மாய் பகுதி, விஸ்வநத்தம் சாலை, காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் காய்கனி சந்தை நடைபெற்றது.
இந்நிலையில், சிவகாசி தொழிலதிபா்களின் நன்கொடையால் காய்கனி சந்தை சீரமைக்கப்பட்டது. அதன்பின்னா், சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா் உத்தரவின்பேரில், நகராட்சி காய்கனி சந்தை சனிக்கிழமை திறக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியுள்ளது.
இச்சந்தையில் 140 போ் கடை நடத்த நகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி பெற்றுள்ளனா். அவா்களைத் தவிர வேறு யாரும் சந்தையில் கடை வைக்க அனுமதியில்லை. யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என, நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம்: பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை

கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


