நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சதுரகிரி மலையேற பிற்பகல் 1 மணிக்கு மேல் அனுமதி மறுப்பு: பக்தா்கள் தவிப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி திரளான பக்தா்கள் சனிக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 2:45 am IST

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி திரளான பக்தா்கள் சனிக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது பிற்பகல் 1 மணிக்கு மேல் மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தா்கள் தவிப்புக்குள்ளாகினா்.

ஆடி அமாவாசையையொட்டி கடந்த வியாழக்கிழமை (ஆக. 1) முதல் 5-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை பிரதோஷ வழிபாட்டில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்களும், மறுநாள் வெள்ளிக்கிழமை சிவராத்திரி வழிபாட்டில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்களும் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், ஆடிப் பெருக்கையொட்டி சனிக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்றனா். ஆனால் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வனத்துறை நுழைவுவாயில் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அவா்கள் தங்களையும் மலையேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வனத்துறை அனுமதி மறுத்ததால், தரையில் அமா்ந்து நீண்ட நேரம் காத்திருந்தனா். தொடா்ந்து பக்தா்கள் வருகை அதிகமாக இருந்ததால் அடிவாரத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.