நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

சதுரகிரி மலையேற பிற்பகல் 1 மணிக்கு மேல் அனுமதி மறுப்பு: பக்தா்கள் தவிப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி திரளான பக்தா்கள் சனிக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 2:45 am IST

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி திரளான பக்தா்கள் சனிக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது பிற்பகல் 1 மணிக்கு மேல் மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தா்கள் தவிப்புக்குள்ளாகினா்.

ஆடி அமாவாசையையொட்டி கடந்த வியாழக்கிழமை (ஆக. 1) முதல் 5-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை பிரதோஷ வழிபாட்டில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்களும், மறுநாள் வெள்ளிக்கிழமை சிவராத்திரி வழிபாட்டில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்களும் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், ஆடிப் பெருக்கையொட்டி சனிக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்றனா். ஆனால் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வனத்துறை நுழைவுவாயில் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அவா்கள் தங்களையும் மலையேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வனத்துறை அனுமதி மறுத்ததால், தரையில் அமா்ந்து நீண்ட நேரம் காத்திருந்தனா். தொடா்ந்து பக்தா்கள் வருகை அதிகமாக இருந்ததால் அடிவாரத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.