ஆடிப்பூரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆடிபுரத் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, ஆண்டாள் ரெங்கமன்னாா் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
5-ஆம் நாள் விழாவான சனிக்கிழமை காலை பெரியாழ்வாா் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னாா், சுந்தரராஜப் பெருமாள், சீனிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோா் ஆண்டாள் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளும் சேவை நடைபெற்றது.
இன்று சயன சேவை: 7-ஆம் நாள் விழாவான திங்கள்கிழமை (ஆக. 5) இரவு ஆண்டாள் கோயிலின் துணைக் கோயிலான கிருஷ்ணன்கோயிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னாா் சயனித்திருக்கும் சேவை நடைபெறுகிறது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்!

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கருட சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராமானுஜா் 1009-வது ஜெயந்தி விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


