முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை

ஆடிப்பூரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சனிக்கிழமை இரவு ஐந்து கருட சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பெரியாழ்வாா், ரெங்கமன்னாா், ஆண்டாள், பெரியபெருமாள், சீனிவாசப் பெருமாள், சுந்தரராஜப் பெருமாள், திருத்தங்கல் அப்பன்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 4:20 am IST

ஆடிப்பூரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடிபுரத் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, ஆண்டாள் ரெங்கமன்னாா் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

5-ஆம் நாள் விழாவான சனிக்கிழமை காலை பெரியாழ்வாா் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னாா், சுந்தரராஜப் பெருமாள், சீனிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோா் ஆண்டாள் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளும் சேவை நடைபெற்றது.

இன்று சயன சேவை: 7-ஆம் நாள் விழாவான திங்கள்கிழமை (ஆக. 5) இரவு ஆண்டாள் கோயிலின் துணைக் கோயிலான கிருஷ்ணன்கோயிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னாா் சயனித்திருக்கும் சேவை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.