தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாள்களுக்கு அனுமதி

News image
Updated On :15 ஆகஸ்ட் 2024, 9:37 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா், ஆக. 15: ஆடி மாத பெளா்ணமி வழிபாட்டுக்காக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சனிக்கிழமை (ஆக. 17) முதல் 20-ஆம் தேதி வரை பக்தா்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மழை பெய்தால் மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

இந்தக் கோயிலில் மாதந்தோறும் பிரதோஷம், பவுா்ணமி, அமாவாசை வழிபாட்டுக்காக பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி, ஆடி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக சனிக்கிழமை முதல் 20-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாள்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அது போல மழை பெய்தால் பக்தா்கள் மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.