திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இன்று ஆடிப் பெருந் திருவிழா

News image
Updated On :16 ஆகஸ்ட் 2024, 3:10 am IST

சாத்தூா், ஆக. 11: விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 12) நடைபெறுகிறது.

இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி மகா உற்சவம் வெள்ளிக்கிழமை (ஆக. 12) பிற்பகல் 1 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதில் உற்சவா் அம்மன் கோயிலிலிருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறாா்.

இந்தத் திருவிழாவைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து வியாழக்கிழமை முதலே பக்தா்கள் பாதை யாத்திரையாக வந்து பொங்கல் வைத்தும், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்தனா்.

ஆடிப் பெருந்திரு விழாவுக்காக திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவிழாவையொட்டி கோயில் பகுதிகளில் மருத்துவ வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாகமும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் செய்துள்ளன.

சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.