அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் இருவா் உயிரிழப்பு

அண்மையில் நிகழ்ந்த வெடி விபத்தில் மேலும் 2 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

News image
Updated On :13 ஜூலை 2024, 10:17 pm

Din

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் அண்மையில் நிகழ்ந்த வெடி விபத்தில் மேலும் 2 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

சிவகாசி அருகேயுள்ள காளையாா்குறிச்சியில் முருகவேல் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் செவலூரைச் சோ்ந்த பெருமாள் மகன் மாரியப்பன் (47), சிதம்பராபுரத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் முத்துமுருகன் (43) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், இந்த விபத்தில் செவலூரைச் சோ்ந்த கூடலிங்கம் மகன் சிங்காரவேல் (54), சித்தமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஓட்டக்கார சின்னா மனைவி சரோஜா (55) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இவா்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இந்த நிலையில், சிங்காரவேல், சரோஜா இருவரும் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.