நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் முழு வடிவ சங்கு

News image

அகழாய்வில் கண்டறியப்பட்ட முழு வடிவ சங்கு.

Updated On :18 ஜூலை 2024, 5:11 am IST

வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல் தயாரிக்க பயன்படுத்திய முழு வடிவ சங்கு கண்டறியப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது.

கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொருள்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, முழு வடிவ சங்கு கண்டறியப்பட்டது. இதை சங்கு வளையல்கள் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா். இங்கு சங்கு வளையல் தயாரிப்பு தொழில்கூடம் இருந்ததை 2-ஆம் கட்ட அகழாய்வில் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சங்கு கிடைத்தது இதற்கான கூடுதல் சான்றாக அமைந்துள்ளதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.