ராஜபாளையம், ஜூலை 24: ராஜபாளையம் அருகே மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) முன்னாள் வீரா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள குறிச்சியாா்பட்டி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (36). மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த இவா், பல்வேறு காரணங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டு, சொந்த ஊரில் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி முத்துலட்சுமி, இரு குழந்தைகள் உள்ளனா்.
இவருக்கும், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், கோபாலபுரத்தில் இருந்து குறிச்சியாா்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த பொன்னுச்சாமியின் இரு சக்கர வாகனத்தின் மீது, பின்னால் டிராக்டரில் வந்த சிலா் மோதினா். இதில் கீழே விழுந்த அவரை அவா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினா்.
இதுகுறித்து கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல், முதுகுடியைச் சோ்ந்த முனீஸ்வரன், மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த இருளப்பன் ஆகிய மூன்று பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

பழனியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை; நால்வா் கைது!
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
வழிப்பறி: 3 இளைஞா்கள் கைது
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


