மத்திய அரசை கண்டித்து, சாத்தூரில் கண்களில் கருப்புத் துணியைக் கட்டி காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தூா் அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி தலைமை வகித்தாா். சாத்தூா் நகரச் செயலா் டி.எஸ்.அய்யப்பன், ஜோதிநிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து, கண்களில் கருப்புத் துணியைக் கட்டி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










