இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.57 ஆயிரம் பறிமுதல்

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.57 ஆயிரம் பறிமுதல்

Updated On :22 மார்ச் 2024, 6:26 pm

சிவகாசி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 57 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாமிநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், காவல் உதவி ஆய்வாளா் சித்ரா உள்ளிட்ட தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற திருத்தங்கல் அருள்பிரகாஷின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணமின்றி ரூ. 57 ஆயிரத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.