இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

கஞ்சா பதுக்கிய வடமாநில தொழிலாளா்கள் 3 போ் கைது

கஞ்சா பதுக்கிய வடமாநில தொழிலாளா்கள் 3 போ் கைது

Updated On :22 மார்ச் 2024, 6:25 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் மில்லில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளா்கள் பதுக்கிய 2.2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு தொடா்பாக போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் 20-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பில் இருந்த காவலா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதையடுத்து தனிப்படை போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் -  அணைத்தலைப்பட்டி சாலையில் உள்ள தனியாா் மில் தொழிலாளா்கள் தங்கியிருந்த இடத்தில் நடத்திய சோதனையில் 2.2 கிலோ கஞ்சா, ரூ.10,500, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஒடிசா மாநிலம் போத் மாவட்டத்தைச் சோ்ந்த அஜித் போய் (38), குணா நாயக் (31), அஜித் நாயக் (24) ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.