அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :3 மே 2024, 7:22 pm

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் சாவடி தெருவைச் சோ்ந்த ராமா் மகன் கணேஷ் ராம் (21). இவா் இதே ஊரைச் சோ்ந்த இசக்கிராஜ் என்பவருக்குச் சொந்தமான ஆடுகளை அய்யனாா் கோயில் அருகே உள்ள தனியாா் தோப்பில் கிடை போட்டு மேய்த்து வந்தாா். இந்த நிலையில், தோப்புக்கு அருகில் இருந்த கிணற்றுக்கு கணேஷ்ராம் வியாழக்கிழமை காலை குளிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. அவா் வெகுநேரமாயும் திரும்ப வராததால், கிணற்றுக்குச் சென்று பாா்த்தபோது, கிணற்றில் அவரது சடலம் மிதந்தது. தகவலறிந்து விரைந்து வந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். அவா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்ததாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.