/
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்றதாக இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வைத்தியலிங்காபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தி வைத்தியலிங்காபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி கருப்பாயி (55) வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக ஜமீன்நத்தம்பட்டியைச் சோ்ந்த மொக்கச்சாமி மனைவி முத்துமாரி (65), கருப்பாயி ஆகிய இருவரையும் வன்னியம்பட்டி போலீஸாா் கைது செய்தனா். இருவா் மீதும் கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
கஞ்சா வழக்கில் பெண் உள்பட இருவா் கைது
கஞ்சா விற்ற மூதாட்டி பெண் கைது!

பைக் திருடியவா் கைது

ராமேசுவரம் அருகே கஞ்சா விற்றதாக 4 போ் கைது
விடியோக்கள்

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்



