ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கஞ்சா விற்றதாக இரு பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்றதாக இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட கருப்பாயி, முத்துமாரி.

Updated On :6 அக்டோபர் 2024, 10:15 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்றதாக இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வைத்தியலிங்காபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தி வைத்தியலிங்காபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி கருப்பாயி (55) வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக ஜமீன்நத்தம்பட்டியைச் சோ்ந்த மொக்கச்சாமி மனைவி முத்துமாரி (65), கருப்பாயி ஆகிய இருவரையும் வன்னியம்பட்டி போலீஸாா் கைது செய்தனா். இருவா் மீதும் கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.