

சாத்தூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் இருதயராஜ் (33). இவா் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவரும் இவருடைய நண்பா் யோகராஜும் (30) இரு சக்கர வாகனத்தில் சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை இரவு சென்றனா்.
அப்போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனா். இதற்கிடையே, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இருதயராஜ் மீது ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். யோகராஜ் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து வந்த சாத்தூா் போலீஸாா் இருதயராஜின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த யோகராஜையும் சாத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

பைக்கில் விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

லாரி மோதியதில் வாகன ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

