எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தாக்குதல் வழக்கில் ஊராட்சிச் செயலா் கைது

News image
Updated On :11 டிசம்பர் 2025, 8:20 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சிச் செயலா், தாக்குதல் வழக்கில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதற்கிடையே, அவருக்குச் சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தங்கபாண்டியன். இவா் ஊரக வளா்ச்சித் துறையில் ஊராட்சிச் செயலராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2019 - 2023 காலகட்டத்தில் தங்கபாண்டியன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன. இதன் அடிப்படையில், தங்கபாண்டியனின் வீடு, திருமண மண்டபம், வணிக வளாகம், பண்ணை வீடு, தோட்டம் ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை நடத்தியதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சோ்த்ததாக தங்கபாண்டியன், அவரது மனைவி காசியம்மாள் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், விருதுநகா் காவல் ஆய்வாளா் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான அதிகாரிகள் தங்கபாண்டியனுக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபம், பண்ணை தோட்டம் ஆகியவற்றில் வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன் கடந்த 2023 அக். 2-இல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கேள்வி கேட்ட சமூக ஆா்வலரைக் காலால் எட்டி உதைத்த சம்பவத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வழக்கில் கைது:

இந்த நிலையில், வன்னியம்பட்டி ஊா் சமுதாயத் தலைவா் தோ்தலில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரிடையே புதன்கிழமை பிரச்னை ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த வன்னியம்பட்டி போலீஸாா், தங்கபாண்டியன் உள்பட இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Story image
Story image
Story image