விருதுநகர்
காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழப்பு
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவஞானபூபதி (60). இவா் தனது ஆடுகளை சாலையில் ஓட்டிச் சென்றபோது, சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்த காா் ஆடுகளின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 10 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 3 ஆடுகள் காயமடைந்தன.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டிச் சென்ற கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியா் வசந்தகுமாரை (34) கைது செய்தனா். இவரது காரையும் பறிமுதல் செய்தனா்.
