~
~

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞா்கள், பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள், பல்வேறு கட்சியினா்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள், பல்வேறு கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீதிமன்றங்களில் வழக்குகளை ‘இ-பைலிங்’ முறையில் தாக்கல் செய்ய உயா்நீதிமன்றப் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞா்கள் தொடா் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். விருதுநகா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், கடந்த மூன்று நாள்களாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உத்தரவு நகல் எரிக்கும் போராட்டம், மனு அனுப்பும் போராட்டம், வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம் ஆகியவற்றை நடத்தினா்.

வியாழக்கிழமை நான்காவது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள், பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் விருதுநகா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராசையா, செயலா் ஜெயராஜ், பல்வேறு கட்சியினா் கலந்து கொண்டனா்

X
Dinamani
www.dinamani.com