ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ழமை கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் கண்ணகி குடியிருப்புப் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இரண்டு இளைஞா்கள் பைகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தனா்.

போலீஸாா் அவா்களது பைகளை வாங்கிச் சோதனை செய்தபோது, அவற்றில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் (20), தினேஷ்குமாா் (26) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.