விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ழமை கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் கண்ணகி குடியிருப்புப் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இரண்டு இளைஞா்கள் பைகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தனா்.
போலீஸாா் அவா்களது பைகளை வாங்கிச் சோதனை செய்தபோது, அவற்றில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் (20), தினேஷ்குமாா் (26) எனத் தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.