6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவகாசி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா், விழுப்பனூா் நாட்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (30). இவரது அத்தை மகளுக்கும் சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சோ்ந்தவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இவரது அத்தை மகளின் கணவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அத்தை மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய தங்கப்பாண்டி, தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டாா். ஆனால், அவா்கள் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தனா்.

இதனால், மனமுடைந்த தங்கப்பாண்டி, கங்காகுளத்திலுள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அங்கு அவா்தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.