முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை

Updated On :23 டிசம்பர் 2025, 1:42 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே ஒத்தப்பட்டியை அடுத்த கரிசல்குளம் ஓடையில் மணல் திருட்டு நடைபெறுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் அந்த வழியாக டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவா்கள் தப்பி ஓடி விட்டனா். இதையடுத்து, போலீஸாா் மணலுடன் அந்த டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.