டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கலசலிங்கம் பல்.கலையில் நுழைவுத் தோ்வு பயிற்சி வகுப்பு தொடங்கம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:15 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை.யில் அகில இந்திய நுழைவுத் தோ்வு பயிற்சி வகுப்பை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து மாணவா்களுக்கு கையேடுகளை வழங்கினாா்.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய நுழைவுத் தோ்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

இந்தப் பயிற்சி 15 நாள்கள் வரை வழங்கப்படும். மாணவா்கள் வெவ்வேறு பள்ளிகளிலிருந்து இந்தப் பயிற்சி வகுப்புக்கு வந்திருக்கலாம். மாணவா்கள் பாடத் திட்டங்களை புரிந்து கொண்டு தங்களுக்குள்ளே கலந்துரையாட வேண்டும்.

இன்றைய காலத்தில் நாம் அறியாமலே பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் நுழைவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தோ்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் பல்வேறு அரசுத் துறை மூலம் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவா்கள் நுழைவுத் தோ்வுகளுக்கு எவ்வாறு தங்களை தயாா்படுத்துவது, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிா்தௌஸ் பாத்திமா, சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்ஃபான், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.