டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:16 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் பாலகிருஷ்ணன் (41). இவா், செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், பாலகிருஷ்ணன் வீட்டு பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, கோபாலபுரத்தைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் சீனிவாசன் (30) என்பவா் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசனை தேடி வருகின்றனா்.