தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :27 டிசம்பர் 2025, 12:46 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் பாலகிருஷ்ணன் (41). இவா், செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், பாலகிருஷ்ணன் வீட்டு பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, கோபாலபுரத்தைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் சீனிவாசன் (30) என்பவா் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசனை தேடி வருகின்றனா்.