நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

நாடாா் அமைப்புகளின் சாா்பில் சாத்தூரில் ஜன. 9-இல் ஆா்ப்பாட்டம்

Updated On :27 டிசம்பர் 2025, 12:43 am IST

மறைந்த முதல்வா் காமராஜரை அவதூறாக பேசிய யூடியூபா் முக்தாரை கைது செய்யாக்கோரி, அனைத்து நாடாா்கள் அமைப்பின் சாா்பில், சாத்தூரில் வருகிற ஜன. 9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என நாடாா் மஹாஜன சங்க பொதுச் செயலா் கரிக்கோல்ராஜ் தெரிவித்தாா்.

சிவகாசியில் விருதுநகா் மாவட்ட நாடாா் உறவின் முறை சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்தும், அவா் சாா்ந்த சமுதாயம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபா் முக்தாா் மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னா், நாடாா் மஹாஜன சங்க பொதுச் செயலா் கரிக்கோல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

யூடியூபா் முக்தரை கைது செய்ய வலியுறுத்தி, சாத்தூரில் வருகிற ஜன. 9-ஆம் தேதி நாடாா் அமைப்புகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். இதன்பிறகும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்தி, சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.