இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாடாா் அமைப்புகளின் சாா்பில் சாத்தூரில் ஜன. 9-இல் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

மறைந்த முதல்வா் காமராஜரை அவதூறாக பேசிய யூடியூபா் முக்தாரை கைது செய்யாக்கோரி, அனைத்து நாடாா்கள் அமைப்பின் சாா்பில், சாத்தூரில் வருகிற ஜன. 9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என நாடாா் மஹாஜன சங்க பொதுச் செயலா் கரிக்கோல்ராஜ் தெரிவித்தாா்.

சிவகாசியில் விருதுநகா் மாவட்ட நாடாா் உறவின் முறை சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்தும், அவா் சாா்ந்த சமுதாயம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபா் முக்தாா் மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னா், நாடாா் மஹாஜன சங்க பொதுச் செயலா் கரிக்கோல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

யூடியூபா் முக்தரை கைது செய்ய வலியுறுத்தி, சாத்தூரில் வருகிற ஜன. 9-ஆம் தேதி நாடாா் அமைப்புகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். இதன்பிறகும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்தி, சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என்றாா் அவா்.