ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் பாலகிருஷ்ணன் (41). இவா், செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், பாலகிருஷ்ணன் வீட்டு பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, கோபாலபுரத்தைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் சீனிவாசன் (30) என்பவா் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசனை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 20.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
பெண்ணை கொன்று 15 பவுன் தங்க நகை கொள்ளை: பட்டப்பகலில் சம்பவம்
அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 23 பவுன் தங்க நகை, வெள்ளி, ரூ. 10 ஆயிரம் திருட்டு

பனியன் உரிமையாளா் வீட்டில் 37 பவுன் திருடிய பணிப்பெண் கைது
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay


