/
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 7 நாட்டு வெடிகுண்டுகளை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகம், குன்னூா் வனப் பகுதி, கணவாய் சரகத்தில் வனக் காப்பாளா் அன்னத்தாய் தலைமையில், வனத் துறையினா் சனிக்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கிருஷ்ணன்கோவில்-வத்திராயிருப்பு சாலை அருகே மலையடிவாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் நாட்டு வெடிகுண்டில் பழங்களை தடவி வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
பின்னா், அங்கிருந்த 7 நாட்டு வெடிகுண்டுகளை வனத் துறையினா் மீட்டு, காவல் துறையில் ஒப்படைத்தனா். இந்த நாட்டு வெடிகுண்டுகளை வைத்தவா்கள் குறித்து வனத் துறை, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு

உதகை அருகே சாலையோரத்தில் இறந்துகிடந்த காட்டெருமை

கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைவு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


