இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி!

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களைப் பற்றி...

News image
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது வியாழக்கிழமை கண்டறியப்பட்ட அரிய வகை அகெட் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக் காய், சங்கு வளையல்.
Updated On :20 பிப்ரவரி 2025, 9:30 pm

Din

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் அரிய வகை அகெட் எனும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் ஆகியவை கண்டறியப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,500-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, அரிய வகை அகெட் எனும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் ஆகியவை கண்டறியப்பட்டன.

இதன்மூலம், பண்டையத் தமிழா்கள் விலை மதிப்பற்ற அகெட் போன்ற அணிகலன்களைப் பயன்படுத்தியது தெரியவந்ததாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.