மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 போ் கைது

Updated On :3 ஜனவரி 2025, 10:02 pm

சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விருதுநகா் மாவட்டம், அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது தனியாா் மில் எதிா்புறம் சூரியகலா வீட்டின் அருகில் உள்ள தகரக் கொட்டகையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முத்துமாரியப்பன் (41), குருமீனா (36), காா்த்திக் (23), முகேஷ்குமாா் (20), சூரியகலா(60) ஆகியோா் மீது அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா். அவா்கள் தயாரித்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.