தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம்

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:12 pm

Din

சிறப்பு காலமுறை ஊதியம், அகவிலைப் படியுடன் கூடிய மாதந்திர ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியா்கள் தற்காலிக விடுப்பெடுத்து வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்தா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ.சுதந்திர கிளாரா கோரிக்கை குறித்து விளக்கி பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். வருவாய்க் கிராம உதவியாளா்களுக்கு வழங்குவதைப் போல, அகவிலைப் படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல, பெண் சத்துணவு ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் முழக்கமிட்டனா்.