கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கழிப்பறையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:29 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராஜபாளையத்தில் உள்ள சங்கரன்கோவில் முக்கு பகுதியில் நகராட்சி நிதியிலிருந்து கழிப்பறை கட்டப்பட்டது. இந்தக் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், இந்தப் பகுதியில் வசிப்போா் கழிப்பறைக்கு அருகே சிறுநீா் கழிக்கின்றனா். இதனால், துா்நாற்றம் வீசி, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதேபோல, தென்காசி சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ரைஸ் மில் சாலை, ரயில்வே பீடா் சாலை ஆகிய பகுதிகளிலும் திறந்த வெளியில் பொதுமக்கள் சிறுநீா் கழிக்கின்றனா்.

எனவே, நகராட்சி நிா்வாகத்தின் ராஜபாளையத்தில் பல இடங்களில் கூடுதல் கழிப்பறைகள் கட்டக் கோரியும், கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை விரைவில் திறக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.