விருதுநகர்
பள்ளியில் போக்குவரத்து விழிப்புணா்வு முகாம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அண்ணாமலை நாடாா்-உண்ணமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து விழிப்புணா்வு, போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இந்த முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் காளிதாஸ் தலைமை வகித்தாா். சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் அணில்குமாா், போதைப் பொருள் உபயோகித்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினாா். சிவகாசி போக்குவரத்து காவல் ஆய்வாளா் செந்தில்வேல், சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்து பேசினாா். ஆதிரியா் கணேஷ்குமாா் நன்றி கூறினாா்.
