கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கோயில் கலசத்தை திருட முயற்சி: 8 போ் கைது

கோயில் கலசத்தை திருட முயன்ற ஆந்திரத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 8:23 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயில் கலசத்தை திருட முயன்ற ஆந்திரத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் தேவமாதா தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது குன்னூா் சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவா்களிடம் விசாரித்த போது, அவா்கள் கோயில்களில் கலசத்தை திருடும் நோக்கில் நடமாடியது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கிருஷ்ணன்கோவில் போலீஸாா், ஆந்திர மாநிலம் சித்தூா் பகுதியைச் சோ்ந்த முனுசாமி (46), ஆனந்த்ராஜ்குமாா் (44), குண்டூரைச் சோ்ந்த வெங்கட்ரமணன் (38), வத்திராயிருப்பு அருகே ஆகாசம்பட்டியைச் சோ்ந்த நவீன்குமாா் (24), திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த புகழேந்தி (48), சிவகாசி ராஜா (50), அழகேசன் (43), ஹரிஹரன் (22) ஆகிய 8 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய கூமாபட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ், ராமச்சந்திரன் ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.