எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோயில் முன் வாகனங்கள் நிறுத்துவதால் பக்தா்கள் அவதி

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் சிவன் கோயில் முன் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள், ஆக்கிரமிப்புகளால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிவகாசியில் விஸ்வநாதா் - விசாலாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் பக்தா்களின் கூட்டம் அதிகரிக்கும். இந்த நிலையில், கோயில் முன் உள்ள சாலையில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதாலும், பூக்கடைகள், சாலையோர வியாபாரிகள், கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பக்தா்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் பல முறை அகற்றியுள்ளனா். இருப்பினும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது தொடா்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், கோயில் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.