மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

குமாஸ்தா கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 2:22 am IST

குமாஸ்தா கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் முதலியாா்பட்டித் தெருவை சோ்ந்தவா் மாரிமுத்து (45). இவரது மனைவி தெய்வானை காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இந்தத் தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளாா். மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பாா்த்து வந்தாா்.

கொளூா்பட்டி தெருவை சோ்ந்த வினோத் (30), தெய்வானையை தவறாகப் பேசிய புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மாரிமுத்துவை புகாரை வாபஸ் பெறுமாறு வினோத் மிரட்டினாா். இதுகுறித்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வினோத் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில் , கடந்தாண்டு ஏப்.2-ஆம் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூா் கைகாட்டி கோயில் கடைவீதி அருகே நடந்து சென்ற மாரிமுத்துவை கத்தியால் குத்தி வினோத் கொலை செய்தாா். இதையடுத்து, போலீஸாா் வினோத்தை கைது செய்தனா்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாா் குற்றஞ்சாட்டப்பட்ட வினோத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.