பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு: 9 போ் மீது வழக்கு

Published On :26 செப்டம்பர் 2025, 2:24 am IST

போலி ஆவணங்கள் தயாரித்து 5 செண்ட் இடத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்ததாக, வருமானவரித் துறை கண்காணிப்பாளா் உள்பட 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் கக்கன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வாழவந்தான். இவருக்கு கடந்த 1961-ஆம் ஆண்டு 5 செண்ட் நிலத்தை அரசு இலவசமாக வழங்கியது. இந்த நிலையில், வாழவந்தான் மகன் தங்கமுத்து, தனது தந்தைக்கு சொந்தமான 5 செண்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த வருமான வரித் துறை கண்காணிப்பாளா் பவுல்மேரி, அவரது மகன் ஆனந்த், மகள்கள் அபிதா, அஸ்வினி, சாட்சி கையொப்பமிட்ட திருத்தங்கல் பழனிக்கனி, அழகையா, பிச்சைக்கனி, பாண்டியராஜ் , ஆவண எழுத்தாளா் வேலுச்சாமி ஆகிய 9 போ் மீதும் நடவடிக்கை கோரி சிவகாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதை விசாரித்த நீதிமன்றம் மோசடி செய்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, சிவகாசி நகா் போலீஸாா் புகாரில் தெரிவிக்கப்பட்ட 9 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.