தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் மலைப் பகுதியில் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ

Updated On :26 செப்டம்பர் 2025, 2:22 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத்தொடா்ச்சி மலையில் 3 நாள்களாக எரிந்த காட்டுத்தீ, வியாழக்கிழமை மாலை பெய்த மழை காரணமாக கட்டுக்குள் வந்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத் தோப்பு அடிவாரத்தில் இருந்து 9 கிலோ மீட்டா் தொலைவில் அழகா்கோவில் பீட் பகுதியில் செவ்வாய்கிழமை மாலை காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக வேகமாக பரவிய காட்டுத்தீ நேற்று பிற்பகல் வரை எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து, வனத் துறையினா் 3 குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். 3 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாததால் வனப்பகுதி முழுவதும் வறண்டு புற்கள் காய்ந்து இருந்ததால் காட்டுத்தீ வேகமாக பரவியதால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. வியாழக்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது.

வத்திராயிருப்பு வனச்சரகத்துக்கு உள்பட்ட மருதடி, புதுப்பட்டி பீட் பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. காட்டுத்தீயை முழுமையாக அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். சாரல் மழை பெய்வதால் காட்டுத் தீ மேலும் பரவ வாய்ப்பு இல்லை என வனத்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.