ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத்தொடா்ச்சி மலையில் 3 நாள்களாக எரிந்த காட்டுத்தீ, வியாழக்கிழமை மாலை பெய்த மழை காரணமாக கட்டுக்குள் வந்தது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத் தோப்பு அடிவாரத்தில் இருந்து 9 கிலோ மீட்டா் தொலைவில் அழகா்கோவில் பீட் பகுதியில் செவ்வாய்கிழமை மாலை காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக வேகமாக பரவிய காட்டுத்தீ நேற்று பிற்பகல் வரை எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து, வனத் துறையினா் 3 குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். 3 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாததால் வனப்பகுதி முழுவதும் வறண்டு புற்கள் காய்ந்து இருந்ததால் காட்டுத்தீ வேகமாக பரவியதால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. வியாழக்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது.
வத்திராயிருப்பு வனச்சரகத்துக்கு உள்பட்ட மருதடி, புதுப்பட்டி பீட் பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. காட்டுத்தீயை முழுமையாக அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். சாரல் மழை பெய்வதால் காட்டுத் தீ மேலும் பரவ வாய்ப்பு இல்லை என வனத்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை! - திருக்குவளை

கனடாவில் பயங்கர காட்டுத்தீ: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

காரைக்குடியில் பலத்த மழை

தம்மம்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் மழை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


