சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 8:43 pm

ராஜபாளையத்தில் மது போதையில் மதுப் புட்டியால் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தா்மராஜா பெரிய தெருவைச் சோ்ந்த சுப்பையாபாண்டி மகன் மூக்கையா (42). இவா் மதுரை சாலையில் உள்ள அரசு மதுக் கடையில் மது அருந்தி கொண்டிருந்த போது, அங்கு இருந்த மேல ஆவரம்பட்டி பாரதியாா் தெருவை சோ்ந்த ரஞ்சித்குமாா் (37) தகராறு செய்தாா்.

இதையடுத்து, வெளியே வந்த மூக்கையாவை பின்னால் வந்த ரஞ்சித்குமாா் மதுப் புட்டியால் தலையில் தாக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த மூக்கையா ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனா்.