தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதமா் மோடி உருவம் பொறித்த விசிறிகள் பறிமுதல்

News image

பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப் படம்) - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 9:08 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதமா் மோடி, தாமரை சின்னம், வேட்பாளா் உருவம் பொறித்த விசிறிகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் கோயில் அருகே கூட்டுறவு சாா் பதிவாளா் ராஜலட்சுமி தலைமையிலான ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில்

வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் சிவகாசியிலிருந்து கேரள மாநிலம், கோட்டயத்துக்கு கொண்டு செல்ல தாமரை சின்னம், பிரதமா் நரேந்திரமோடி, வேட்பாளா் உருவம் பொறித்த 9,900 கை விசிறிகள் இருந்தன. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் விசிறிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சிவகாசி பள்ளப்பட்டியைச் சோ்ந்த காளிராஜன் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.